sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

/

20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

1


ADDED : பிப் 20, 2025 03:47 PM

Google News

ADDED : பிப் 20, 2025 03:47 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குறைந்தது 20,000 விமானிகள் தேவைப்படுவர் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேலும் 50 விமான நிலையங்கள் உருவாகி இருக்கும் என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.

டில்லியில் விமானிகளுக்கான மின்னணு பணியாளர் உரிமம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இங்குள்ள உடான் பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் வும்லுன்மாங் வுல்னம் மற்றும் டிஜிசிஏ இயக்குநர் ஜெனரல் (டிஜி) பைஸ் அகமது கித்வாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது:

உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தைகளில் ஒன்றான நம் நாட்டில் அதிகரித்து வரும் விமானப் பயணத் தேவையைப் பூர்த்தி செய்ய வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கு குறைந்தது 20,000 விமானிகள் தேவைப்படுவர்.

விமான போக்குவரத்து எப்போதும் இணைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முதுகெலும்பாக இருந்து வருகிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேலும் 50 விமான நிலையங்கள் இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us