sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்

/

2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்

2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்

2,000 ஏக்கரில் அறிவு, ஆராய்ச்சி நகரம் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டம்


ADDED : பிப் 17, 2024 04:49 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l கடந்த 2023 - 2024ம் நிதி ஆண்டில் கர்நாடகா அரசு 88,150 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து உள்ளது.

l பெங்களூரு அருகே 2,000 ஏக்கரில் அறிவு, சுகாதாரம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி நகரம் அமைக்கப்படும். இதன்மூலம் 40,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதுடன், 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும்

l தொழில்துறை வளர்ச்சியில் கர்நாடகா உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த நிலையை அப்படியே கையாண்டு இன்னும் நிறைய, முதலீடுகளை ஈர்ப்போம். இந்த ஆண்டு புதிய தொழில் கொள்கை வகுக்கப்படும்

l சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, பிப்ரவரி 2025ல் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலத்திற்கு அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும்.

l பெங்களூரு - மும்பை பொருளாதார மண்டலத்தில், தார்வாட் அருகே 6,000 ஏக்கரில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும். இதன்மூலம் வடமாவட்டங்களில் நிலவும் வேலையில்லா பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதுடன், அப்பகுதி பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடையும்

l புதிய மணல் கொள்கை - 2020, பொதுமக்கள், அரசு பணிகளுக்கு மலிவு வகையில், மணல் கிடைக்க செய்யும் வகையில் இருந்தது. இந்த திட்டம் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும். புதிய மணல் கொள்கையில் உள்ள, சில பிரச்னைகளும் சரிசெய்யப்படும்

l மாண்டியா சர்க்கரை ஆலை வளாகத்திற்குள், புதிய சர்க்கரை ஆலை கட்டப்படும். இதற்கான பணம், அரசு ஒதுக்கும் நிதி, ஆலையின் சொத்துகள், பிற வழிகளில் இருந்து பெறப்படும்

l ஜவுளி மற்றும் நெசவு தொழில் வளர்ச்சிக்காக, புதிய ஜவுளி கொள்கை அமல்படுத்தப்படும். இதன் மூலம் 10,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முடியும்.

l மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், கலபுரகி மாவட்டத்தில் 1,000 ஏக்கர் நிலத்தில், ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும்; 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும்.

l பொது - தனியார் பங்களிப்பில் கித்துார் கர்நாடகா, கல்யாண கர்நாடகா, மைசூரு மண்டலத்தில் புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்

l மினி ஜவுளி பூங்கா 25 மாவட்டங்களில் அமைக்கப்படும்

l மஹாத்மா காந்தி வந்து சென்ற, மைசூரின் நஞ்சன்கூடு பதனவாலு கிராமத்தில், காதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

l பல்லாரியில் ஜீன்ஸ் தொழிலை ஒருங்கிணைத்து, உலகதரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஜீன்ஸ் தயாரிப்பு பூங்கா மற்றும் அடிப்படை வசதி மையம் அமைக்கப்படும்.






      Dinamalar
      Follow us