sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்

/

சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்

சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்

சீன நிறுவனங்கள் துணையுடன் கடன் மோசடி நிதி நிறுவனத்துக்கு ரூ.2,146 கோடி அபராதம்


ADDED : அக் 12, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, சீன நிறுவனங்களுடன் இணைந்து, கடன் செயலியை செயல்படுத்தியதில், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், 'பி.சி., பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனத்துக்கு, அமலாக்கத்துறை 2,146 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நார்வே மற்றும் சீனாவின் சில நிறுவனங்களுடன் இணைந்து, 'கேஷ்பீன்' என்ற கடன் செயலியை நடத்தி வந்த வங்கி சாரா நிதி நிறுவனமான பி.சி., பைனான்ஸ் சர்வீசஸ் மீது, மோசடி புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, 'பெமா' எனப்படும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக, அந்நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை 2,146 கோடி ரூபாயை அபராதம் விதித்தது.

கடன் செயலி தொடர்பாக, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றுக்கு இவ்வளவு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் சீன உரிமையாளர்கள் வசம் இருந்தது, பெமா சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், மென்பொருள் உரிமங்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதி என்ற பெயரில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, பி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வாயிலாக, 430 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் 252.36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, கடந்த 7ம் தேதி அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில்களை கவனமாக ஆய்வு செய்ததில், நிதி நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெளிவாக நிரூபணமானது என அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு 2,146 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் பி.சி.பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் மீது 43 எப்.ஐ.ஆர்.,கள் பதிவாகிஉள்ளன.

விசாரணை தொடர்பான வழக்கின் தகவல் அறிக்கையை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது.

எப்.ஐ.ஆர்.,களில் 362 கடன் செயலிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கடனாளிகளின் தகவல்கள் 'டெலி காலர்'களுக்கு வழங்கப்பட்டு, தவணை தவறுவோர் மிரட்டப்பட்டனர். இந்நிறுவனம் ரூ.173 கோடி அன்னிய நேரடி முதலீடு பெற்றதும் தெரிய வந்துள்ளது.

முன்பே எச்சரித்த ஆர்.பி.ஐ.,

நார்வேயின் 'ஓபரா' குழுமத்தின் துணை நிறுவனமான பி.சி.பைனான்சியல் சர்வீசஸ் மீது ஹைதராபாதில் அதிக புகார்கள் பதிவானதால், அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்நிறுவனம் விதிகளை மீறி செயல்படுவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. கடன் செயலிகள் வாயிலாக, அதிக சதவீதத்தில் வட்டி வசூலிப்பதாகவும் ஆர்.பி.ஐ., மற்றும் சி.பி.ஐ., லோகோவை தவறாக பயன்படுத்தி, கடன் வசூலில் ஈடுபடுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. மேலும், பி.சி.பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வங்கிசாரா நிதி நிறுவனத்துக்கான பதிவு சான்றிதழையும் ரிசர்வ் வங்கி ரத்து செய்திருந்தது.








      Dinamalar
      Follow us