sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு

/

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கார் புகுந்து 3 பேர் உயிரிழப்பு


ADDED : செப் 04, 2025 12:33 AM

Google News

ADDED : செப் 04, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாஸ்பூர் : சத்தீஸ்கரில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் போதை நபர் ஓட்டி வந்த கார் நுழைந்ததில், மூவர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.

சத்தீஸ்கரின் ஜாஸ்பூர் மாவட்டம், ஜுருதந்த் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பந்தல்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நீர்நிலையில் கரைப்பதற்காக கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

பகிசா - ஜாஸ்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு அந்த ஊர்வலம் சென்றது. அப்போது குடி போதையில் இருந்த நபர் ஓட்டி வந்த கார், தீடீரென கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் நுழைந்தது. அதிவேகமாக வந்த கார் மோதியதில், பலர் துாக்கி வீசப்பட்டனர்.

இதில், விபின் பிரஜாபதி,17, அரவிந்த் கெர்கெட்டா, 19, கிரோவதி யாதவ், 32, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்படுத்திய போதை டிரைவர் சுக்சாகர் வைஷ்ணவ், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us