sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

/

பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பொது நலன் என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

14


ADDED : நவ 05, 2024 12:41 PM

Google News

ADDED : நவ 05, 2024 12:41 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

தனியார் சொத்துகளை பொது பயன்பாட்டிற்கு மாநில அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று (நவ.,05) தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சதீஸ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா, பர்வேலா, நாகரத்னா, ராஜேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் 9 பேர் அடங்கிய அமர்வில், 'அரசியல் சாசன பிரிவு 39(B) படி எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது' 7 பேர் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு அளித்தனர்.

'ஒரு தனிநபருக்கு சொந்தமான நிலத்தை, சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானதாக கருத முடியாது. பொது நலன் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் மாநில அரசு கையகப்படுத்த முடியாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். அரசியல் சாசன பிரிவு 39(B) பிரிவின் கீழ் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிபதி கிருஷ்ண ஐயர் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.






      Dinamalar
      Follow us