sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

/

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

இந்தியாவின் சாதனை உலகளாவிய கவனம் பெற்றது: ஜெய்சங்கர் பெருமிதம்

11


ADDED : நவ 24, 2024 07:42 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:42 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.



பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில், ஜெய்சங்கர் பேசியதாவது: 10 ஆண்களில் இந்தியா உலக அளவில் ஒரு பெரிய வீரராக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் சாதனைகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே ஏதுவாக இருந்தாலும் உலக தரத்தில் கூட தனித்த நிற்கின்றன. உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்பம், நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தில் தரையிறங்கி சாதனை படைத்தது உள்ளிட்டவை உலக அளவில் இந்தியாவுக்கு மரியாதையை அதிகரிக்க செய்தது.

திறமையான இந்தியர்களை மற்ற நாடுகள் தேடி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவுகள் வலுப்பெற்றது. எங்கள் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நம்மை தனித்து நிற்க வைக்கிறது. பழங்கால கலாசாரங்கள் வெற்றிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. பல துறைகள் பல்வேறு சாதனைகளை படைத்தது.

ஒவ்வொரு அன்னிய நேரடி முதலீட்டு பேச்சுவார்த்தையிலும், நாங்கள் கடுமையாக சிந்திக்கிறோம். தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். இன்று, பாரத் பிராண்ட் மிக பெரியதாக கருதப்படுகிறது. ஒரு லட்சிய பிராண்டாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us