sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கலப்பட கள் குடித்த 4 பேர் தெலுங்கானாவில் பலி

/

கலப்பட கள் குடித்த 4 பேர் தெலுங்கானாவில் பலி

கலப்பட கள் குடித்த 4 பேர் தெலுங்கானாவில் பலி

கலப்பட கள் குடித்த 4 பேர் தெலுங்கானாவில் பலி


ADDED : ஜூலை 11, 2025 11:58 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 11:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில், கலப்படம் செய்யப்பட்ட கள் குடித்த நான்கு பேர் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான குகாட்பள்ளி, பாலாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கள்ளுக்கடைகளில் ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை கள் குடித்த சிலருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 38 பேர் ஹைதராபாதில் உள்ள நிஜாம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஆறு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் செகந்திராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொத்தனார் சீதாராம், 47, என்பவர் 7ம் தேதி உயிரிழந்தார். இவர், எச்.எம்.டி., ஹில்ஸ் காலனியில் உள்ள கள்ளுக்கடையில் கள் குடித்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் மூவர் பலியாகினர். இவர்களும் கள் குடித்ததாக கூறப்படுகிறது. கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதே இறப்புக்கு காரணமாக கூறப்படுறது.

இது குறித்து ஹைதராபாத் போலீசார் கூறியதாவது:

கள் குடித்த உடன் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பலியான நான்கு பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடல் உறுப்புகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் கிடைத்த பின்னரே இவர்களது இறப்புக்கு கலப்பட கள் காரணமா என தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கலப்பட கள் விற்பனை செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட கள்ளுக்கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து பெறப்பட்ட கள் மாதிரி அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us