sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகாண்டில் சோகம்! பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி

/

உத்தரகாண்டில் சோகம்! பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி

உத்தரகாண்டில் சோகம்! பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி

உத்தரகாண்டில் சோகம்! பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து! 5 பேர் பலி


ADDED : ஜன 12, 2025 07:19 PM

Google News

ADDED : ஜன 12, 2025 07:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்; உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாரி என்ற பகுதியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் புறப்பட்ட பஸ், டாஹல்சோரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த பஸ், எதிர்பாராத விதமாக சாலையைவிட்டு விலகி 100 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது.

எதிர்பாராத இந்த விபத்தைக் கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று பஸ்சில் உள்ளவர்களை மீட்க உள்ளூர் போலீசாருடன் முயற்சி மேற்கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.

சில மணி நேர மீட்புப் பணிக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரின் சடலங்களை மீட்டனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாரி மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

பஸ் விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே காரணம் என்ன என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.






      Dinamalar
      Follow us