sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'

/

 சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'

 சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'

 சபரிமலை பெருவழி பாதையில் தினமும் 500 பேருக்கு 'பாஸ்'


ADDED : நவ 29, 2025 03:39 AM

Google News

ADDED : நவ 29, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: “எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 500 பேருக்கு தினமும், 'ஸ்பாட் புக்கிங் கூப்பன்' வழங்கப்படும்,” என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:



அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாதைகளில் பக்தர்கள் வரவில்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தும்.

பக்தர்கள் வருகை குறையவில்லை. தேவையான அரவணை ஸ்டாக் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு கிடைக்காமல் பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்காக முக்குழியில் தினமும் 500 பேருக்கு, 'ஸ்பாட் புக்கிங் கூப்பன்' வழங்கப்படும்.

இதை பெறும் பக்தர்கள் வழக்கமான பாதையில் மட்டுமே பயணித்து பம்பை வந்து சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும்.

சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் அன்னதானத்தில், மதியம் பாயசத்துடன் கூடிய விருந்து வழங்கும் திட்டம் டிச., 2 முதல் துவங்கும். சோறு, பருப்பு, சாம்பார், அவியல், துவரன், பப்படம், ஊறுகாய், பாயசம் என குறைந்தபட்சம் ஏழு வகை உணவுகள் இருக்கும்.

மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை இது வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பாயசம் உண்டு. ஸ்டீல் பிளேட், கப்புகள் இதற்காக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் விமானத்தில் பயணிக்கும் போது தங்களுடனேயே இருமுடியை எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து விமான போக்கு வரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று கூறுகையில், “சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விமானம் வாயிலாக வரும் பக்தர்கள், 'கேபின் பேக்கேஜ்' எனப்படும், பயணியரின் உடமைகளை எடுத்து வரும் சேவை மூலம் மட்டுமே இருமுடிகளை எடுத்து வர இதுவரை அனுமதிக்கப்பட்டனர். இனி, அவர்கள் தங்கள் இருக்கைக்கே இருமுடிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. “இந்த சலுகை நேற்று துவங்கி அடுத்த ஆண்டு ஜன., 20 வரை வழங்கப்படும். மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தரும் அதே வேளையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்,” என்றார்.








      Dinamalar
      Follow us