600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்
600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்
ADDED : டிச 08, 2025 07:31 AM

நாசிக்: மஹாராஷ்டிராவில் 600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் தாலுகாவில் அமைந்துள்ள சப்தஷ்ரிங் கார்க் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த டொயோடோ இன்னோவா கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த நிபாட் தாலுகாவில் உள்ள பிம்பல்கோன் பஸ்வந்த் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி படேல்,50, ரசீலா படேல்,50, வித்தால் படேல்,65, லதா படேல்,60, வச்சன் படேல்,60, மணிபென் படேல்,70, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாவட்ட பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
6 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பிற்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இது மிகவும் துயரமான சம்பவம் என்று கூறிய மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்,” என அறிவித்தார்.

