sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

/

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

6 லட்சம் லாரிகள் ஓடவில்லை: கர்நாடகா ஸ்தம்பிக்கிறது

2


ADDED : ஏப் 15, 2025 01:37 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:37 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: டீசல் விலை உயர்வு. சுங்கசாவடி கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் இன்று லாரி ஸ்டிரைக் நடக்கிறது. சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாததால் மாநிலம் முழுவதும் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் இந்த ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் முழு ஆதரவு கிட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் லாரி மூலம் செல்லும் தண்ணீர் விநியோகம். சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை, அடியோடு நிறுத்தப்பட்டதால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜீன்ஸ் உள்பட ஆயத்த ஆடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் அரசு தரப்பில் இன்று பேச்சு நடக்கிறது. இதில் முடிவுகள் எட்டாத பட்சத்தில் மாநிலத்தில் நிலைமை சீராகாது. பல்வேறு பொருட்களில் விலையும் எகிறக்கூடும். தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு அளித்திருப்பதால் லாரி ஸ்டிரைக்கால் தமிழக கர்நாடக இடையே செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us