ADDED : மே 02, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஈவ்-டீசிங், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 38 நாட்களில் மட்டும் 6,584 பேரை காவல்துறையின் 'ஷிஸ்டாச்சார் படை' கைது செய்துள்ளது.
இந்த முயற்சி, பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்கவும் பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதி என, அந்த அதிகாரி கூறினார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 275 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புகார் கிடைத்த உடனே அதிரடி நடவடிக்கையை சிறப்பு பயிற்சி பெற்ற 'ஷிஸ்டாச்சார் படைகள்' மேற்கொள்கின்றன.

