6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தெலுங்கானாவில் 7 பேர் பலி
6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தெலுங்கானாவில் 7 பேர் பலி
ADDED : மார் 27, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பத்ராச்சலம்: தெலுங்கானா மாநிலம்பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர்.
பத்ராச்சலம் மாவட்டம்பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம்மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர்.
கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.