sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது

/

வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது

வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது

வங்கதேச பிரஜைகள் 92 பேர் கைது


ADDED : மே 27, 2025 09:12 PM

Google News

ADDED : மே 27, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தென்மேற்கு டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக 92 வங்கதேச பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

தென்மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரைக் கண்டறியும் 10 நாள் சிறப்பு தேடுதல் வேட்டையை சமீபத்தில் காவல்துறை துவக்கியது.

உளவுத்துறை அளித்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நகர், கிஷன்கர், சப்தர்ஜங் என்க்ளேவ், வசந்த் குஞ்ச் (வடக்கு மற்றும் தெற்கு), கபாஷேரா, பாலம் கிராமம், டில்லி கன்டோன்மென்ட், சாகர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 92 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் டில்லியில் பல ஆண்டுகளாக வசித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், கன்டோன்மென்ட் பகுதியில் 12 ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 142 பேரை இதுவரை, தென்மேற்கு மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us