ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் தவிப்பு
ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் தவிப்பு
UPDATED : ஏப் 13, 2024 12:07 AM
ADDED : ஏப் 12, 2024 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டம் மாணிக் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் திறந்த வயல் வெளியில் விளையாடிகொண்டிருந்தனர். அப்போது அங்கு திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்தான்.
தகவலறிந்த கிராமத்தினர் சிறுவன் விழுந்தது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின் மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். மீட்பு பணிகள் இரவை தாண்டியும் நீடிக்கிறது.

