ADDED : பிப் 01, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்: சாலையில் நின்றிருந்த லாரி மீது, கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
ஹாசன் ஆலுாரின் ஈஸ்வரஹள்ளி கொடிகே கிராமத்தில், நேற்று அதிகாலை கார் ஒன்று வேகமாகச் சென்றது.
அப்போது சாலை ஓரத்தில் பழுதடைந்து நின்றிருந்த லாரியை, கார் ஓட்டுனர் கவனிக்காமல், அதன் மீது மோதினார். மோதிய வேகத்தில் கார், சாலையில் உருண்டது.
இதில் பயணம் செய்த பிரதீப், 30, குரு, 25, ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற இருவர் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆலுார் போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாலை பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலையில் நின்றிருந்த லாரி, கார் ஓட்டுனரின் கண்களுக்கு தென்படவில்லை. இதுவே விபத்துக்குக் காரணமானது.
ஆலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

