sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவதுாறு பரப்பிய நபரை விடுவித்ததாக போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்கு

/

அவதுாறு பரப்பிய நபரை விடுவித்ததாக போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்கு

அவதுாறு பரப்பிய நபரை விடுவித்ததாக போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்கு

அவதுாறு பரப்பிய நபரை விடுவித்ததாக போராட்டம் நடத்திய 500 பேர் மீது வழக்கு


ADDED : அக் 21, 2024 06:51 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் மதத்தை பற்றி சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்து பதிவிட்ட நபரை போலீசார் விடுவித்ததாக தகவல் பரவியதால், 500க்கும் மேற்பட்டோர் கல்வீச்சு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர் மாவட்டத்தின் மீராபூர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் அந்த தொகுதிக்கு உட்பட்ட புத்தனா நகரைச் சேர்ந்த நிகில் தியாகி என்ற வியாபாரி, முஸ்லிம் மதம் குறித்து அவதுாறு கருத்தை சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்டார்.

இதுதொடர்பாக ஜாமியத் உல்ஹாமிஹிந்த் அமைப்பின் நகர தலைவர் முப்தி நசீர் அகமது அளித்த புகாரின்படி அவரை போலீசார் கைது செய்தனர்.

எனினும், நிகில் தியாகியை போலீசார் விடுவித்ததாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நிகில் தியாகியின் கடை முன் திரண்டு கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், கைதான நிகில் தியாகியை தாங்கள் விடுவிக்கவில்லை எனவும், தொடர்ந்து அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகவும் விளக்கமளித்தனர். இதையடுத்து, தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எனினும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில், போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதுதவிர, கூடுதல் போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us