sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடி போதையில் வாகனம் ஓட்டிய நபர் மீது வழக்கு

/

குடி போதையில் வாகனம் ஓட்டிய நபர் மீது வழக்கு

குடி போதையில் வாகனம் ஓட்டிய நபர் மீது வழக்கு

குடி போதையில் வாகனம் ஓட்டிய நபர் மீது வழக்கு


ADDED : நவ 12, 2024 05:56 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், மது அருந்திவிட்டும், இரு சக்கர வாகனம் ஓட்டியவர் மீது, பெங்களூருவில் முதன் முறையாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓட்டுனர் உரிமம் இல்லாமல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, குமாரசாமி லே-அவுட்டில், ஒரு வாலிபர் ஓட்டுனர் உரிமம் இன்றி, மது போதையில் வாகனம் ஓட்டி வந்தார். அவரை மடக்கிப் பிடித்த குமாரசாமி லே-அவுட் போலீசார், கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர்.

பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கிரிமினல் வழக்குப் பதிவு செய்வது, இதுவே முதன் முறையாகும்.

பெங்களூரில், கடந்த வாரம் இரவு நேரத்தில், போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் எம்.என்.அனுசேத் தலைமையில் நடந்த சோதனையில், 53 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.

அப்போது, 294 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வதற்கு போலீஸ் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், கடந்த 10 மாதங்களில், மது போதையில் பள்ளி வாகனங்களை ஓட்டியதாக 118 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.






      Dinamalar
      Follow us