sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

/

வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு : பிரதமர்

6


ADDED : மார் 20, 2024 09:06 PM

Google News

ADDED : மார் 20, 2024 09:06 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன். வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு என பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் முன்னணி செய்தி சேனலான நியூஸ் 18 குழுமம் சார்பில் ‛‛எழுச்சி இந்தியா'' (ரைசிங் பாரத் ) என்ற தலைப்பில் , நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியது,

* 2019-ல் இந்தியாவின் எழுச்சியை உலக நாடுகள் கண்டன.

* ரைசிங் பாரத் என்பது அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு என்பதன் அர்த்தம்.

* வளர்ச்சி மற்றும் அமைதி நிலவிய நாட்டை பயங்கரவாதிகள் அழிக்க நினைத்தனர்.

* அடுத்த அரசை தீர்மானிப்பதில் 97 கோடி மக்களின் பங்கு உள்ளது.

* இந்த தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் 2 கோடி உள்ளனர்.

* இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் மிரட்டலாக அமைந்தனர்.

* 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் சொந்தமானது.

* என் மீது 100 அவதூறுகள் வைத்தாலும் என்னை பின்னோக்கி தள்ள முடியாது. அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்.

* இந்தியாவின் ஏற்றுமதி 700 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சர்யத்துடன் வியந்து பார்க்கின்றன.

* தேசமே முதலில் என்ற அடிப்படையில் பா.ஜ., செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த தேசமே எனது நிலைப்பாடு

* எனது மூன்றாவது ஆட்சி காலத்தில் அதிகமான மைல்கல்கள் எட்டப்படும்.

* உலகிலேயே மிகவும் இளைமையான நாடாக இந்தியா உள்ளது.

* தங்களுக்கு முந்தைய ஆட்சியில் பொய்களே நிரம்பி இருந்தன.

* ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

* ஊழலை ஒழிக்க ஆன்லைன் டெண்டர் முறையை அமல்படுத்தினோம்.

* 2014-ல் மிகவும் பின்தங்கியிருந்த தேசத்தை மீட்டெடுத்தோம்.

* மக்களுக்கானவர்களே அரசு அதிகாரிகள். 2014-க்கு முன்பு அரசியல்வாதிகளுக்காகவே அதிகாரிகள் செயல்பட்டனர்.

* அரசு அதிகாரிகள் சமானிய மக்களுக்கு உழைக்க வேண்டியவர்களே.

* ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்களின் பதவிகாலம் முடிவடைந்தது.

* எதிர்கட்சிகளிடம் குவியல் குவியலாக பணம் சிக்குகிறது.

* வாழ்க்கையில் ஒரு ஊழல் பகுதி என ராஜிவ் கூறினார்.

* ஊழல் குறித்த மக்களின் எண்ண ஓட்டத்தை நாங்கள் மாற்றினோம்.

* பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்துள்ளோம்.

* சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் அல்ல.

* ஏழை மக்களிடமிருந்து உணவு, நலத்திட்டங்கள், உதவிகள் திருடப்பட்டன.

* ஏழை மக்களுக்கு சுத்தமான குடிநீரும், மருத்துவ வசதியும் மறுக்கப்பட்டன. வங்கி சேவைகள் கிடைக்காத நிலையே இருந்தது.

* 2019-ல் புதிதாக 5000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டன. மோடி உத்தரவாதத்திற்கு விளம்பரம் தேவையில்லை.

* நடுத்தர மக்கள் கல்வி கற்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

* நடுத்தர வகுப்பினரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்று சேர்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us