sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

/

அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!

30


ADDED : ஏப் 27, 2025 07:40 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:40 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகிஸ்தான் நமது அண்டை நாடு; ஆனால் அண்ட முடியாத எதிரி நாடு. ஆனால், பாகிஸ்தானியரை பொறுத்தவரை இந்தியாவை பல்வேறு விதங்களில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உயர்தர மருத்துவமனைகளோ, அதிநவீன சிகிச்சை முறைகளோ அங்கு கிடையாது. பயங்கரவாதிகளுக்கு நிதி வாரி வழங்குவதில் தான், அங்குள்ள அரசு அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர் பெரும்பாலும் இந்தியாவுக்கு தான் வருகின்றனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அட்டாரி - வாஹா சோதனைச் சாவடியை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. 'சார்க்' விசா சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த, பாகிஸ்தானியர் பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒரு பாகிஸ்தானியர், தனது இரண்டு குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.

அவர் கூறுகையில், ''எனது 9 மற்றும் 7 வயது குழந்தைகள் இருவர் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் அளிக்க பாகிஸ்தானில் எந்த வசதியும் இல்லை. டில்லியில் உயர்தர சிகிச்சை இருப்பதால், அழைத்து வந்துள்ளேன். அவர்களின் அறுவை சிகிச்சை, அடுத்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் நலமுடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், பஹல்காம் சம்பவத்துக்குப் பின், நாங்கள் உடனடியாக பாகிஸ்தான் திரும்புமாறு கூறப்பட்டுள்ளோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. மருத்துவர்கள் நன்கு கவனிக்கின்றனர். எனது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நான், இரு நாட்டு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்,'' என்றார்.

இந்தியா தான் தாய் மண்'

பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து இந்தியரை மணந்த பெண் ஒருவர் நான் பாகிஸ்தான் செல்ல மாட்டேன். இந்தியா தான் எனது நாடு. என்னை இங்கு வாழ அனுமதியுங்கள் என, பிரதமர் மோடிக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்தவர் சீமா ஹைதர்.
இவருக்கு பாகிஸ்தானில் சிந்து மகாணத்தில் பாகிஸ்தானியர் ஒருவருடன் திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளனர். அப்போது, ஆன்லைன் வாயிலாக, இந்தியரான சச்சின் மீனா என்பவருடன் காதல் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நான்கு குழந்தைகளுடன், அவர் சட்டவிரோதமாக வந்தார். பின், சச்சின் மீனாவை திருமணம் செய்து, உத்தரபிரதேசம் கவுதம புத்தா நகரில் வசித்து வந்தார்.
அவரை இந்திய குடியேற்ற துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பல்வேறு சட்டச்சிக்கல்களை சமாளித்து, நொய்டா நகரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.மத்திய அரசின் விசா ரத்து உத்தரவால், பாதிக்கப்பட்டுள்ள சீமா, 'நான் பாகிஸ்தானில் பிறந்தாலும் இந்தியா தான் எனது தாய் மண். என்னை பாகிஸ்தானுக்கு அனுப்பாதீர். பாகிஸ்தான் சென்றால், எங்களால் நிம்மதியாக வாழ முடியாது,'' என பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்களை வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.








      Dinamalar
      Follow us