sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது

/

கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது

கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது

கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது


ADDED : ஆக 08, 2024 06:08 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுப்பிரமணியபுரா: ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி, கல்லுாரி மாணவியை மிரட்டி நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சுப்பிரமணியபுராவில் வசிப்பவர் தேஜஸ், 19. இவருக்கும், 19 வயது கல்லுாரி மாணவிக்கும், சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் மொபைல் போனில் பேசியதுடன், அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இந்நிலையில் கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக அமர்ந்து பேசியதை, தேஜஸ் மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார்.

அந்த புகைப்படத்தை மாணவியிடம் காட்டி, இந்த புகைப்படத்தை உங்கள் வீட்டில் காட்டி விடுவேன். அப்படி செய்யாமல் இருக்க, நான் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் என்று, மிரட்டி உள்ளார். பயந்து போன மாணவி, தேஜஸ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து உள்ளார்.

பின், வீட்டில் இருந்து நகையையும் திருடி கொடுத்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து நகை காணாமல் போனது குறித்து, மாணவியிடம், அவரது தாய் விசாரித்த போது, தேஜஸ் மிரட்டுவதை கூறி அழுதார்.

தேஜஸ் மீது சுப்பிரமணியபுரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், மாணவியை மிரட்டி பறித்த 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.






      Dinamalar
      Follow us