sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!

/

நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!

நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!

நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!


UPDATED : நவ 13, 2025 11:38 PM

ADDED : நவ 13, 2025 11:32 PM

Google News

UPDATED : நவ 13, 2025 11:38 PM ADDED : நவ 13, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, 32 கார்களை வாங்கி, அவற்றை, 'வெடிகுண்டு கார்'களாக மாற்ற முயற்சித்த திடுக்கிடும் தகவலும், டில்லி செங்கோட்டை தாக்குதல் தொடர்பான போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 'டில்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்' என, மத்திய அரசு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

பெண் டாக்டர்


'ஹூண்டாய் ஐ20' காரை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்த டாக்டர் உமர் நபி உயிரிழந்த நிலையில், கைதான டாக்டர்கள் ஆதில், முஸாம்மில் அகமது, பெண் டாக்டர் ஷாஹீன் சயீது உள்ளிட் டோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் விதமாக டிச., 6ம் தேதி, டில்லியில் ஆறு இடங்கள் உட்பட நாடு முழுதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

இதற்காக, 32 கார்களை வாங்கி, அவற்றை வெடிகுண்டு கார்களாக மாற்ற, 2,900 கிலோ வெடி பொருட்களை பயங்கரவாதிகள் பதுக்கி வைத்தனர்.

டாக்டர்கள் ஆதில், முஸாம்மில் அகமது, பெண் டாக்டர் ஷாஹீன் சயீது, இவர்களை மூளைச் சலவை செய்த முக்கிய சதிகாரனான இமாம் இர்பான் அகமது ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், பயங்கரவாதிகள் தீட்டிய இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

இதனால், பதற்றம் அடைந்த பரிதாபாத் டாக்டர் உமர், 'ஹூண்டாய் ஐ20' காரை ஓட்டிச் சென்று டில்லி செங்கோட்டையில் வெடிக்கச் செய்தார்.

செங்கோட்டையின் பார்க்கிங் பகுதியில் அந்த காரை நிறுத்தி விட்டு, பயங்கர உயிர் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது முதற்கட்ட திட்டமாக இருந்தது என கூறப்படுகிறது.



பறிமுதல்


தாக்குதல் நடத்த முடிவெடுத்த 10ம் தேதி, திங்கள் கிழமை என்பதால் செங்கோட்டையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அந்த திட்டத்தை மாற்றி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சிக்னலில் உமர் காரை வெடிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்த தயார் செய்து வைத்திருந்த கார்களில், அல் பலாஹ் பல்கலை அருகே நிறுத்தப்பட்டிருந்த எச்.ஆர்.87 யு 9988 என்ற பதிவெண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள கண்டாவாலி கிராமத்தில் இருந்து, டி.எல்.10 சி.கே. 0458 என்ற பதிவெண் கொண்ட சிவப்பு நிற 'ஈகோ ஸ்போர்ட்' காரும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த காரின் பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத இளைஞரை, காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சதித்திட்டம்


இதுதவிர, 'மாருதி டிசைர்' காரும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடி பொருட் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டில்லி செங்கோட்டை தாக்குதல் தொடர்பாக கைதான பயங்கரவாதிகள், காஷ்மீரின் புல்வாமாவில் நடந்தது போலவே, மிகப் பெரிய சதிச் செயலை அரங்கேற்றவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கார் வெடிகுண்டுகளை தயாரித்து காஷ்மீரில் வெடிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியிருந்தனர். புல்வாமாவில் நடந்தது போல அந்த தாக்குதல் இருக்க வேண்டும் என அவர்கள் எண்ணி இருந்தனர். டாக் டர் முஸாம்மில் கைதான தும், பயங்கரவாதிகளின் திட்டம் தவிடுபொடியானது.

இதனால், ஆவேசமும், பதற்றமும் அடைந்த உமர், செங்கோட்டையில் தனியே சென்று தாக்குதல் நடத்தினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

'கோடுவேர்டு உகாஸா!' டில்லி தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு, துருக்கியில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. 'உகாஸா' என்ற ரகசிய வார்த்தை மூலம், துருக்கியைச் சேர்ந்த பயங்கரவாதியை முக்கிய பயங்கரவாதியான உமரும், அவரது கூட்டாளிகளும் அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. அரபு மொழியில், 'உகாஸா' என்றால் சிலந்தி என அர்த்தம். எனவே துருக்கியில் உள்ள பயங்கரவாதியின் உண்மையான பெயர் வேறாக இருக்கும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தற்போது அந்த முகம் தெரியாத பயங்கரவாதி துருக்கியின், அங்காராவில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தான் டில்லி செங்கோட்டை தாக்குதலுக்கு பயங்கரவாதிகளை ஒருங்கிணைத்து தேவையான நிதி உதவிகளை வழங்கியதாகவும் நம்பப்படுகிறது.



துருக்கியில் சதி! டில்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய முக்கிய பயங்கரவாதியான டாக்டர் உமர், கடந்த 2022, மார்ச்சில் டாக்டர் முசாபர் அகமது ராதர் மற்றும் டாக்டர் முஸாம்மில் ஷகீலுடன் துருக்கி சென்றுள்ளார். அங்கு மூவரும் இரு வாரங்களுக்கு மேல் தங்கியுள்ளனர். அப்போது, 14 பேரை அவர்கள் சந்தித்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக மற்ற பயங்கரவாத சம்பவங்களில், குற்றவாளிகள் பாகிஸ்தானுக்கு சென்று வந்த ஆதாரங்கள் கிடைக்கும். ஆனால், இந்த சம்பவத்தில் அவர்கள் அந்நாட்டிற்கு சென்றதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை சிக்கவில்லை. இதில், உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் கைதான டாக்டர் ஆதிலின் சகோதரர் தான், துருக்கிக்கு சென்ற டாக்டர் முசாபர் அகமது ராதர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இவர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார்.



கடையின் கூரையில் கை மீட்பு டில்லியில் கார் குண்டுவெடித்து மூன்று நாட்களான நிலையில், சம்பவ இடத்தில் இருந்து, 300 மீ., தொலைவில் உள்ள கடையின் கூரை மேல் துண்டிக்கப்பட்ட கை ஒன்றை போலீசார் நேற்று மீட்டனர். அது தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிலால் ஹசன், 35, என்பவர் நேற்று உயிரிழந்தார். இத னால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெடிகுண்டு விபத்து நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட, 40 மாதிரிகளில் இரண்டு தோட்டாக்கள், வெடி பொருட்களின் சிதறல்கள் மீட்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஒன்று அமோனியம் நைட்ரேட்டை விட சக்தி வாய்ந்தது. பிரேத பரிசோதனையில் ஹசனின் நுரையீரல் மற்றும் குடலில் பல்வேறு காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



'ரெட் கார்னர் நோட்டீஸ்' டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மூன்று டாக்டர்கள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஏழு பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், காஷ்மீரின் காசிகுண்டை சேர்ந்த டாக்டர் முசாபருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக தெரிவித்தனர். காரை ஓட்டிச் சென்ற உமர் நபி, முஸாம்மில் உடன், 2021ல் மேற்காசிய நாடான துருக்கிக்கு முசாபரும் சென்றுள் ளார். அங்கு 21 நாட்கள் மூவரும் தங்கியுள்ளனர். டில்லி சம்பவம் நடந்த உடன் உமருடன் தொடர்புடைய முசாபரை பிடிக்க முயன்றபோது அவர் துபாய்க்கு கடந்த ஆகஸ்டில் சென்றது தெரியவந்தது. அவர் ஆப்கனில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்ய, காஷ்மீர் போலீசார் சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியை நாடியுள்ளனர். 'ரெட் கார்னர் நோட்டீஸ்' அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



காரை ஓட்டியவர் உமர் நபி; டி.என்.ஏ., சோதனையில் உறுதி டில்லி செங்கோட்டை பகுதியில் கடந்த 10ம் தேதி, காரில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்றது, காஷ்மீர் டாக்டர் உமர் நபி என்பது டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறுகையில், 'வெடிகுண்டு சம்பவத்தில் பலியான ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் உமர் நபியின் தாயிடம் கடந்த 11ல் டி.என்.ஏ., மாதிரி சேகரிக்கப்பட்டது. இதை, குண்டு வெடித்த இடத்தில் சிதறிக்கிடந்த உமர் நபியின் உடல் பாகங்களுடன் மரபணு சோதனைக்கு உட்படுத்தினோம். சோதனையில் அது உமரின் டி.என்.ஏ., உடன் ஒத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. பயங்கரவாத அமைப்புடன் இணைந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்த உமர், காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர்' என தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us