sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி

/

2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி

2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி

2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி


ADDED : ஜன 06, 2025 03:42 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்: ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்ட பெண்ணை, ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து இடைத்தரகர் மோசடி செய்துள்ளார்.

பாகல்கோட் முதோல் நகரில் வசிப்பவர் சோமசேகர், 38. இவர் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் சோர்வடைந்தார். ஓராண்டுக்கு முன் இடைத்தரகர்கள் சிலர், இவரை தொடர்பு கொண்டு திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறினர். 4 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசினர்; சோமசேகரும் சம்மதித்தார். அதன்பின் இடைத்தரகர்கள், ஷிவமொக்காவை சேர்ந்த மஞ்சுளா, 30, என்பவரை முதோல் நகரின் காளிகாம்பா கோவிலில், சோமசேகருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவரிடம் 4 லட்சம் ரூபாய் கட்டணம் பெற்று கொண்டு சென்று விட்டனர்.

தாமதமானாலும் தனக்கு திருமணம் நடந்தது என, சோமசேகர் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் அவரது மனைவி மஞ்சுளா, வீட்டை விட்டு ஓடிவிட்டார். மனைவியை தேடி ஷிவமொக்காவுக்கு சென்ற போதுதான், அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது தெரிந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசேகர், இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு, தன் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றினர். இது குறித்து, முதோல் போலீஸ் நிலையத்தில் சோமசேகர் புகார் அளித்தார். சத்யப்பா, மஞ்சுளா உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

- அமர்நாத் ரெட்டி, எஸ்.பி., பாகல்கோட்

திருமணம் செய்து வைத்து, பணம் பறிக்கும் கும்பல் செயல்படுகிறது. இந்த கும்பலை பிடிக்க முயற்சிக்கிறோம். இவர்கள் பெலகாவி, ராமதுர்கா, ஷிவமொகா, தார்வாடை சேர்ந்தவர்கள் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்து, விசாரணை நடத்துவோம். பாகல்கோட் மாவட்டத்தில் இதுபோன்று நடந்தது இதுவே முதன் முறையாகும்.








      Dinamalar
      Follow us