sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ADDED : அக் 30, 2024 01:42 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை, நம் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்முவில், ஜோக்வான் என்ற இடத்தில் ராணுவ ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மீது, அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பின், தப்பியோடிய பயங்கரவாதிகள் மீது, ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையிலான சண்டையில், பயங்கரவாதி ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் தப்பியோடிய நிலையில், போலீசார் உதவியுடன் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஹாசன் கோவில் அருகே நேற்று மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து, ராணுவத்தினருடன் இணைந்து போலீசாரும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தினர்.

ம ோப்ப நாய்


கிட்டத்தட்ட 27 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சண்டையில், தப்பியோடிய மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், நம் ராணுவத்தில் இருந்த 4 வயதான 'பாந்தம்' என்ற மோப்ப நாய் உயிரிழந்தது. ஜம்மு - காஷ்மீரில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஏழு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us