sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

/

துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

துறவறம் பூண்ட நடிகை மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்கம்: அகாரா நிறுவனர் அதிரடி

8


ADDED : ஜன 31, 2025 01:27 PM

Google News

ADDED : ஜன 31, 2025 01:27 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரயாக்ராஜ்: துறவறம் பூண்ட பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னியை, மகா மண்டலேஸ்வர் பதவியில் இருந்து நீக்குவதாக, கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் அறிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, இந்திய மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், நாயகியாகவும் நடித்தவர். தமிழில், ஷோபா சந்திரசேகரன் இயக்கிய நண்பர்கள் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். போலீஸ் விசாரணைக்கு வராமல், வெளிநாடுகளில் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பிய அவர், தற்போது நடந்து வரும் கும்பமேளாவுக்கு சென்றார். அங்கு துறவறம் பூண்டதாகவும், தன் பெயரை மாய் நந்த் கிரி என்று பெயர் மாற்றிக்கொண்டதாகவும் அறிவிப்பு வெளியானது. அவரை, கின்னர் அகாரா என்ற அமைப்பின் மகா மண்டலேஸ்வர் ஆக நியமித்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது.

இது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும், அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூட, தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். 'உலக இன்பத்தை எல்லாம் அனுபவித்தவர்கள், ஒரே நாளில் துறவி ஆகி விடுகின்றனர்' என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், கின்னர் அகாரா அமைப்பின் நிறுவனர் ரிஷி அஜய் தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: எனக்குத் தெரியாமல், மகா மண்டலேஸ்வர் லஷ்மி நாராயண் திரிபாதி, இந்த வேலையை செய்து விட்டார். அவரை அகாராவில் இருந்து நீக்குகிறேன். மம்தா குல்கர்னியையும் மகா மண்டலேஸ்வர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us