ADDED : பிப் 08, 2026 06:48 AM

சந்திப்பூர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 3,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி - 3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட் டது. நம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத திறனை வலுப்படுத்துவதில், 'அக்னி - 3' ஏவுகணை முக்கிய பங்கு வகிக்கிறது .
ராணுவத்திற்கான தளவாடங்களை மேம்படுத்தி வரும் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணு வ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், அக்னி ரக ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
அக்னி - 1 ஏவுகணை 700 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.
அக்னி - 2 ஏவுகணை 2,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கும். அந்த வரிசையில் அக்னி - 3 ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., மேம்படுத்தி ஒடிஷா மாநிலம் சந்திப் பூரில் சோதித்தது.
அப்போது, நிர்ணயிக்கப்பட்ட 3,000 கி.மீ., இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கியதால், ராணுவ விஞ்ஞானிகள் திருப்தி அடைந்தனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அக்னி - 3 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்தது. அக்னி - 5 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள நாடுகளையும், நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

