sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை

/

காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை

காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை

காற்றின் தரம் மிகவும் மோசம் முதியோர் இல்லங்களில் முன்னெச்சரிக்கை


ADDED : நவ 05, 2025 02:14 AM

Google News

ADDED : நவ 05, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில் நேற்று காலை நிலவரப்படி, நிலவிய காற்றின் சுத்தத்தன்மை மிகவும் மோசமாக இருந்தது. சுத்தக்காற்றின் தரம் சராசரியாக, 311 என இருந்தது.

சமீப காலமாக பல்வேறு காரணங்களால், டில்லி காற்றின் தரம் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. காற்றின் சுத்தத்தன்மையை ஏ.க்யு.ஐ., என்ற குறியீடு மூலம், தினமும் காலையில் குறிப்பிடப்படுகிறது.

அந்த வகையில், 0 - 50 சிறப்பு; 51 - 100 திருப்திகரம்; 101 - 200 சராசரி; 201 - 300 மோசம்; 301 - 400 மிகவும் மோசம்; 401 - 500 மிகவும் அபாயகரமான நிலை என குறிப்பிடப்படுகிறது.

நேற்று காலை நிலவரப்படி, டில்லி நகரின் சராசரி ஏ.க்யு.ஐ., 311 என இருந்தது. எனினும், அலிப்பூர் - 421, வாசிர்புர் - 407, பாவனா 402, ஆனந்த்விஹார் - 412 என்ற அளவில் இருந்தது. இது, மிகவும் அபாயகரமான நிலையை குறிப்பிடுகிறது. 17 வானிலை ஆய்வு மையங்களில் காற்றின் சுத்தத்தரம் மிகவும் மோசமாக, 300க்கு மேலேயே இருந்தது.

டில்லியின் அதிகபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்ஷியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரி அளவை விட, 1.2 செல்ஷியஸ் அதிகரித்து, 16.5 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருந்ததாக, வானிலை ஆய்வு மையத்தின் சமீர் என்ற செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்டோமேடிக் மிஸ்ட் ஸ்பிரேயிங் இயந்திரங்களை அமைக்க முடிவு
காற்று மாசு மிகவும் மோசமாக இருக்கும் இடங்களாக கருதப்படும் மூன்று, ஹாட் ஸ்பாட் சாலைகளில், தானியங்கி மிஸ்ட் ஸ்பிரேயிங் சிஸ்டம் வாயிலாக இயந்திரங்களை அமைக்க, டில்லி மாநில பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக நரேலா, பாவனா, ஜஹாங்கீர்புரி ஆகிய மூன்று சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து இருப்பதால், அந்த பகுதியில் காற்று மாசு மிகவும் அதிகமாக இருப்பதால், ஆட்டோமேடிக் மிஸ்ட் ஸ்பிரேயிங் சிஸ்டம் எனும் தானியங்கி முறையை அமைக்க, டில்லி மாநில பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
இப்போதைய நிலையில், நகர்ந்து செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் வாயிலாக, நீராவி பனித்துகள்களாக, மிஸ்ட் ஆக மாற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. முதற்கட்டமாக, மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ள தானியங்கி மிஸ்ட் ஸ்பிரேயிங் சிஸ்டத்திற்கு, டெண்டர் விட, டில்லி மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.








      Dinamalar
      Follow us