sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

/

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

23


ADDED : மார் 17, 2025 04:34 PM

Google News

ADDED : மார் 17, 2025 04:34 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டார் என்ற புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து, பின்னர் கைதான அவர், ஜாமினில் விடப்பட்டார். பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது இன்று (மார்ச் 17) விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கொடுத்தால் போதும் என்று கவர்னர் தரப்பில் முதலில் கேட்கப்பட்டது. தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை மொழி பெயர்த்து கேட்பதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து. 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன் பின்னர், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி தருவது தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us