ADDED : ஜூலை 31, 2011 10:53 PM

புதுடில்லி:'லோக்பால் மசோதாவில், பிரதமருக்கு விலக்கு அளித்திருப்பதன்
மூலம், விசாரணையில் இருந்து, அவரை பாதுகாக்க முயற்சிக்கவில்லை' என, மத்திய
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.மத்திய சட்ட அமைச்சர் சல்மான்
குர்ஷித், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:லோக்பால்
மசோதாவில் இருந்து, பிரதமருக்கு விலக்கு அளித்திருப்பதன் மூலம், பல்வேறு
சந்தேகங்களை, பலரும் எழுப்பியுள்ளனர். இதனால், '2ஜி' ஸ்பெக்ட்ரம் போன்ற
பெரிய அளவிலான ஊழல் வழக்குகளை, லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா
என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.பிரதமர் பதவி வகிப்போரை, லோக்பால்
வரம்பிற்குள் கொண்டு வராததன் மூலம், அவரை பாதுகாக்க, அரசு
முயற்சிக்கவில்லை. பிரதமர் பதவி வகிப்போர் மீதான நடவடிக்கையை, ஒத்தி
வைக்கும் முயற்சி தான், மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு கவுரவம் அளிக்கும் நோக்கத்தில் தான், இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகியதும், அவர் மீது
நடவடிக்கை எடுக்க, மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு சல்மான்
குர்ஷித் கூறினார்.