sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்தேஷ்காலியில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்: என்எஸ்ஜி விரைவு

/

சந்தேஷ்காலியில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்: என்எஸ்ஜி விரைவு

சந்தேஷ்காலியில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்: என்எஸ்ஜி விரைவு

சந்தேஷ்காலியில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்: என்எஸ்ஜி விரைவு

1


ADDED : ஏப் 26, 2024 05:52 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 05:52 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்தது தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே, சி.பி.ஐ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி. இப்பகுதியில் வசித்த பழங்குடியின மக்களை மிரட்டி, நிலங்களை ஷாஜஹான் ஷேக் தன் ஆதரவாளர்கள் உதவியுடன் பறித்துள்ளார். மேலும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பல புகார்கள் அவர் மீது கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சந்தேஷ்காலியில் ரேசன் முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பான வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில், ஆயுதங்கள், வெடிமருந்துகள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அங்கு விரைந்து உள்ளனர்.

மேல்முறையீடு


இதனிடையே, சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்துமாறு கோல்கட்டா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us