sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூரில் ஆயுதங்கள் வெடி பொருட்கள் பறிமுதல்

/

மணிப்பூரில் ஆயுதங்கள் வெடி பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள் வெடி பொருட்கள் பறிமுதல்

மணிப்பூரில் ஆயுதங்கள் வெடி பொருட்கள் பறிமுதல்


ADDED : ஜன 12, 2024 01:31 AM

Google News

ADDED : ஜன 12, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால், மணிப்பூரின் சுராச்சந்த்பூர் மற்றும் தெங்கனோபால் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூக்கி உள்ளிட்ட பழங்குடியின அமைப்புகள் கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 180 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுதும் அடிக்கடி போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி பாதுகாப்பு படையினர் தெங்கனோபால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, நான்கு கையெறி குண்டுகள், ஏ.கே., 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி, ஐந்து சிறிய வகை நாட்டுத்துப்பாக்கி, ஐந்து வெடிகுண்டுகள், ஏ.கே., 56 வகை துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடி பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கடந்த 9ம் தேதி சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், சிறிய துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி ஒன்று, ஐந்து ஒற்றைக்குழல் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கண்ணீர் புகைக்குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

சுராச்சந்த்பூர் மலைப்பகுதிக்கு நேற்று முன்தினம் விறகு சேகரிக்கச் சென்ற பிஸ்ணுபூர் மாவட்டம் அகாசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் மாயமானதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், விறகு சேகரிக்கச் சென்ற மூவர் நேற்று சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டனர். மாயமான மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இறந்த மூவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us