sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

/

பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

பஞ்சாபில் அடுத்த ஆண்டு மின்வெட்டு இருக்காது அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி


ADDED : அக் 09, 2025 03:09 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலந்தர்:“அடுத்த ஆண்டு முதல் பஞ்சாபில் மின்வெட்டு இருக்காது,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், துணை மின்நிலையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரத் துறையில் மிகப்பெரிய அளவில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு கோடை கோலத்தில் பஞ்சாபில் மின்வெட்டு இருக்காது.

பஞ்சாபில் 90 சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. அதேபோல, விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் தடையில்லா மின்சாரம் பெறுகின்றனர். விரைவில் நாள் முழுதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மாநிலம் முழுதும் தடையின்றி 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்கட்டமைப்பில், 25,000 கி.மீ., தூரத்துக்கு புதிய மின் ஒயர்கள், 8,000 புதிய டிரான்பார்மர்கள் மற்றும் 77 புதிய மின் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us