sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

/

நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது


ADDED : அக் 09, 2025 03:06 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'ஆன் - லைன்' வாயிலாக வேலை வாய்ப்பு எனக்கூறி, நர்ஸிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடில்லி திலக் நகரில் வசிக்கும் நர்ஸ் ஒருவர், சமூக ஊடகத்தில் வந்த 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர், அதிக வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய ஆலோசனை கூறினார்.

அதை நம்பிய நர்ஸ், 15.94 லட்சம் ரூபாயை பல்வேறு பரிவர்த்தனைகளில் அனுப்பினார். ஆனால், அதற்குப் பின், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சபீர் அஹமது,43, முஹமது சர் பராஸ்,32, மற்றும் முஹமது தில்ஷாத்,20, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

மூவரும் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு மோசடிக் குழுவுடன் தொடர்பில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில், தில்ஷாத் கல்லுாரியில் படித்து வருகிறார். மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us