sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு

/

அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு

அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு

அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு


ADDED : ஜூலை 02, 2025 03:54 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 03:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லா: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்று ஹிமாச்சல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் அனிருத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிம்லாவில் அதிகாரி தாக்குதல் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் அனிருத் சிங் கூறியதாவது:

சம்பவம் நடந்தாக கூறப்படும் இடத்தில் சுமார் 150 பேர் அங்கு இருந்தனர். உள்ளூர்வாசிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் தவறான நடத்தைக்காக அவர்கள் மீது போலீசில் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். என் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் ஆதாரமற்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன்.

கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறப்போவதை அறிந்த தேசிய நெஞ்சாலை ஆணைய அதிகாரிகள், அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்.

தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த அதிகாரி மருத்துவமனையில் எவ்வளவு காலம் இருந்தார் என்பதற்கான பதிவை நீங்கள் கேட்க வேண்டும்.அங்குள்ள உள்ளூர்வாசிகளிடமிருந்து நீங்கள் வாக்குமூலங்களை கேட்டு பெறுங்கள். விசாரணையின் முடிவுகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அனிருத் சிங் கூறினார்.






      Dinamalar
      Follow us