sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

/

பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

பா.ஜ., வென்றால் மம்தா, ஸ்டாலின், உத்தவ், பினராயி சிறையில் அடைக்கப்படுவர்: கெஜ்ரிவால் பேட்டி

81


UPDATED : மே 11, 2024 03:03 PM

ADDED : மே 11, 2024 01:46 PM

Google News

UPDATED : மே 11, 2024 03:03 PM ADDED : மே 11, 2024 01:46 PM

81


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.

சாமி தரிசனம்


மதுபானக் கொள்கை வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இன்று( மே 11) டில்லியின் கன்னாட் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.

ஹனுமன் ஆசி


இதன் பிறகு நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: நான் சிறையில் இருந்து நேரடியாக உங்களிடம் வந்துள்ளேன். 50 நாட்களுக்கு பிறகு உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி. சிறிது நேரத்திற்கு முன்னர், எனது மனைவி மற்றும் பஞ்சாப் முதல்வருடன் ஹனுமன் கோயிலுக்கு சென்றேன். கட்சிக்கும், நமக்கும் ஹனுமனின் ஆசி உள்ளது. அவரின் கருணையால் உங்கள் முன் நான் இருக்கிறேன்.

ஆம் ஆத்மியை அழிக்க முயற்சி


ஆம் ஆத்மி என்பது இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய சிறிய கட்சி. ஆனால், நமது கட்சியை அழிப்பதற்கான எந்த வாய்ப்பையும் பிரதமர் தவறவிடவில்லை. தொடர்ச்சியாக நமது நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பி உள்ளார். நம்மை அழிக்க வேண்டும் என பிரதமர் எண்ணுகிறார். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஆம் ஆத்மி தரும் என அவர் நம்புகிறார்.

துன்புறுத்தல்

கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும், நம்மை போன்று துன்புறுத்தலை சந்தித்தது இல்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் சொல்கிறார். ஆனால், அனைத்து திருடர்களும் அவரது கட்சியில் தான் உள்ளனர். பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்.

போராட்டம்


ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என பிரதமர் எண்ணினால், அவர் என்னிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும். டில்லியில் ஆட்சி அமைத்த பிறகு, எனது அமைச்சர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்து நான் சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபில், அமைச்சர் ஒருவரை சிறைக்கு அனுப்பினோம்.

என்னை கைது செய்ததன் மூலம் எந்த தலைவரையும் கைது செய்ய முடியும் என நினைக்கின்றனர். அவர்களின் இந்த இயக்கத்திற்கு ஒரே நாடு, ஒரே தலைவர் என பெயர் சூட்டி உள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.






      Dinamalar
      Follow us