அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் நெகிழ்ச்சி
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் நெகிழ்ச்சி
UPDATED : ஜன 22, 2024 05:35 PM
ADDED : ஜன 22, 2024 12:32 PM

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடந்தது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் இது. இதற்காக அயோத்தி நகர் முழுவதும் காவி கொடியுடன், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விரதம் நிறைவு
![]() |
நினைவுப்பரிசு
பிரதமர் மோடிக்கு ராமர் கோயில் வடிவிலான சிலையை நினைவு பரிசாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.
நாளை முதல் தரிசிக்கலாம்
பிராண பிரதிஷ்டைக்கு பின் நாளை (ஜன.,23) ராம் லல்லாவின் (பால ராமர்) தரிசனம் தொடங்கும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறினார். இதனையடுத்து பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்யலாம்.