sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.3.30 லட்சம் மோசடி பஞ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

/

ரூ.3.30 லட்சம் மோசடி பஞ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

ரூ.3.30 லட்சம் மோசடி பஞ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

ரூ.3.30 லட்சம் மோசடி பஞ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'


ADDED : டிச 01, 2024 11:10 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனேக்கல்,: கிராமத்தினரே சொந்த பணத்தை செலவிட்டு செய்த பணிகளுக்கு, போலியான பில்கள் தயாரித்து, பணம் பெற்ற கிராம பஞ்சாயத்து அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பெங்களூரு, ஆனேக்கல்லின் மன்டபா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சி.கே.பாளையாவில் சாலை பழுது பார்க்கும்படி கிராமத்தினர் பல முறை கோரியும், அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. எனவே, கிராமத்தினர் தாங்களே பணம் திரட்டி பணிகளை நடத்தினர்.

ஆனால் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ரமேஷ், அந்த பணிகளை ஒப்பந்ததாரரை வைத்து நடத்தியதாக, பொய்யான பில்களை தயாரித்து 3.30 லட்சம் பெற்று கொண்டார்.

இதையறிந்த கிராமத்தினர், ஒப்பந்ததாரர், கிராம வளர்ச்சி துறையிடம் புகார் அளித்தனர். துறை ரீதியான விசாரணையில், அதிகாரி ரமேஷின் மோசடி உறுதியானது. எனவே அவரை சஸ்பெண்ட் செய்து, சில நாட்களுக்கு முன் கிராம வளர்ச்சி துறை உத்தரவிட்டது.

இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஆலுார் கிராம பஞ்சாயத்துக்கு, தற்காலிக பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்ற ரமேஷுக்கு அனுமதி அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us