sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

/

மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

7


UPDATED : ஜன 15, 2025 07:40 PM

ADDED : ஜன 14, 2025 02:30 PM

Google News

UPDATED : ஜன 15, 2025 07:40 PM ADDED : ஜன 14, 2025 02:30 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: போட்டிகளின் போது, கிரிக்கெட் வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதற்கு தடை விதிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது.

10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை இந்திய அணி இழந்திருக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பையும் இழந்துவிட்டது. அணியின் வெற்றி சதவீதம் இப்படி இருக்கும் நிலையில், கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர் இடையே மோதல், கருத்து முரண்பாடு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந் நிலையில், போட்டிகளின் போது, கிரிக்கெட் வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதற்கு தடை விதிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. பார்டர் கவாஸ்கர் போட்டி தோல்வியே பி.சி.சி.ஐ., இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து, பி.சி.சி.ஐ.,நிர்வாகிகள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், இனி போட்டிகளின் போது வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவதை தடை செய்து விடலாம் என்று விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் இதுபோன்ற அனுமதிகளுக்கு தடை விதிக்கலாம் என்று பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு கிரிக்கெட் தொடர் 45 நாட்களை கடந்து இருக்கிறது என்றால் மனைவி, குடும்பத்துடன் அந்த வீரர் 14 நாட்கள் மட்டுமே தங்கிக் கொள்ளலாம்.

அதே தருணத்தில் குறுகிய கால கிரிக்கெட் தொடர் என்றால் வெறும் 7 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி தரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தொடருக்காக செல்லும் போது ஒன்றாகவே பயணிக்க வேண்டும், அணி வீரர்கள் முன்னரே சென்ற பின்னர், தனியாக வந்து அணியில் இணைந்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவையும் பி.சி.சி.ஐ., எடுத்துள்ளதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us