sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்

/

வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்

வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்

வரையாடு பிரசவ காலம் துவக்கம்; பிப்.1ல் இரவிகுளம் பூங்கா மூடல்


ADDED : ஜன 15, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் பிரசவிக்க துவங்கியதால் பிப்ரவரி முதல் தேதி முதல் பூங்கா மூடப்பட உள்ளது.

இங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் ஜூன், ஜூலையில் மேக மூட்டத்துடன் பெய்யும் சாரல் மழையின் போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பிரவச காலம் பிப்ரவரியில் துவங்கி, மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது ராஜமலைக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஜனவரியில் வனக்காவலர்கள் அவற்றை கண்காணிப்பது வழக்கம். அவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் தற்போது, 2 குட்டிகள் பிறந்ததாக தெரியவந்தது. புதிதாக பிறந்த குட்டிகள் ராஜமலையில் தாயுடன் வலம் வருகின்றன. வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் வழக்கம் போல் பிப்., ஒன்றில் பூங்கா மூடப்பட உள்ளது.

ஏப்.29 முதல் மே 2 வரை நடந்த கணக்கெடுப்பில் இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 144 குட்டிகள் உள்பட 827 வரையாடுகள் உள்ளது.

தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us