sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

/

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மே.வங்க சிறுமி: 3 மாத சிகிச்சைக்கு பின் நலம்

1


ADDED : ஜூன் 12, 2024 10:43 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பறவை காய்ச்சலால், பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பறவைக்காயச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல், அதிக காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவர், குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பிப்., மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி, 3 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார். அந்த சிறுமி வசித்த வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோழிப்பண்ணைகள் உள்ளதாகவும், அவரை தவிர குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பறவைக்காய்ச்சலால், இந்தியாவில் மனிதர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வு இது இரண்டாவது ஆகும். ஏற்கனவே, 2019 ல் ஒருவர் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் .






      Dinamalar
      Follow us