sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'இன்டர்போல்' உதவியை நாட 'பாரத்போல்' தளம் துவக்கி வைப்பு

/

'இன்டர்போல்' உதவியை நாட 'பாரத்போல்' தளம் துவக்கி வைப்பு

'இன்டர்போல்' உதவியை நாட 'பாரத்போல்' தளம் துவக்கி வைப்பு

'இன்டர்போல்' உதவியை நாட 'பாரத்போல்' தளம் துவக்கி வைப்பு

2


ADDED : ஜன 07, 2025 11:22 PM

Google News

ADDED : ஜன 07, 2025 11:22 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக பெறும் வகையில், 'பாரத்போல்' எனப்படும் புதிய ஆன்லைன் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது.

இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் நேரடி முகமையாக தற்போது, நம் நாட்டின் சார்பில் சி.பி.ஐ., செயல்படுகிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன; கால விரயமும் ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில், சி.பி.ஐ., சார்பில், பாரத்போல் என்ற புதிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகளும், தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இன்டர்போல் அமைப்பிடம் வைக்க முடியும்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி கேட்பதுடன், நம் நாட்டில் பதுங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும்.

இதைத் தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதால், உள்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாநில போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உதவும்.

இந்த புதிய இணையதளத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பான சேவையாற்றிய, 35 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி போலீஸ் விருதுகளை அமித் ஷா வழங்கினார்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us