sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலி பத்திரங்களை தடுக்க 'பூ சுரக் ஷா' திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு

/

போலி பத்திரங்களை தடுக்க 'பூ சுரக் ஷா' திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு

போலி பத்திரங்களை தடுக்க 'பூ சுரக் ஷா' திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு

போலி பத்திரங்களை தடுக்க 'பூ சுரக் ஷா' திட்டம் ஞாயிறில் கூடுதல் சார் - பதிவாளர் ஆபீஸ் திறப்பு


ADDED : பிப் 17, 2024 04:40 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வருவாய்


l போலி பத்திரங்கள் தயாரிப்பதை தடுக்க, வருவாய் துறையில் சோதனை முறையில் 'பூ சுரக் ஷா' திட்டம் கொண்டு வரப்படும். இதனால் நில ஆய்வு, ஸ்கேனிங், பதிவுகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்

l மாநிலத்தில் இதுவரை சுமார் 30,700 கிராமங்களில், ட்ரோன் மூலம் ஆய்வு நடத்தி, நில உரிமையாளர்களுக்கு சொத்து மற்றும் உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மாநிலம் முழுதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

l நவீன தொழில்நுட்பம் மூலம், பொது மக்களுக்கு குறைந்த நேரத்தில் நிலங்கள் ஆய்வு நடத்தி, டிஜிட்டல் ஆவணங்கள் வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் ட்ரோன் உட்பட கருவிகள் வழங்கப்படும்.

l 'டிஜி' - வருவாய் திட்டத்தின் கீழ், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வழங்க, மாநிலத்தின் கிராம அளவிலான அலுவலக நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்


l நில ஆய்வு துறையின் 240 பதிவு அறைகளை நவீனமயமாக்கி, ஆன்லைன் மூலம் வருவாய் பதிவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

l அரசு நில ஆக்கிரமிப்பை தடுக்க, ஆர்.டி.சி., என்ற உரிமை, குத்தகை, பயிர்களின் ஆவணங்களை, 'லாண்ட் பீட்' செயலி மூலம் கண்காணிக்கப்படும்.

l நடப்பாண்டு 42 தாலுகா அலுவலக காம்ப்ளக்ஸ்கள் கட்ட 80 கோடி ரூபாயும்; 14 மாவட்ட அலுவலக காம்ப்ளக்ஸ்கள் கட்ட 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு

l கடந்த 2023 - 24ல் மாநிலத்தில் 223 தாலுகாக்கள் வறட்சி தாலுகாக்களாக அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக 18,171 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கும்படி, மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஏற்கவில்லை. இதை சமாளிக்க மாநில அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது

நிலத்தடி நீர் மட்டம்


l மாநிலத்தின் 33.19 லட்சம் விவசாயிகளுக்கு தலா 2,000 ரூபாய் வீதம், 629 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l சிறு தீவனப் பெட்டிகள் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l 'விவசாய பாக்யா' திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


l சிறிய நீர்ப்பாசன துறை சார்பில் குடிநீர் பாதுகாப்பு பணிக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l நடப்பாண்டு வறட்சி பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l மாணவர்கள் இடையே பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'பருவநிலை மாற்ற அனுபவ மையம்' அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l பதிவு துறையில் 'எந்த நேரத்திலும் - எங்கும் பதிவு' முறை, மாநிலம் முழுதும் நீட்டிக்கப்படும்

l பொது மக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமைகளில் கூடுதல் துணை சார் - பதிவாளர் அலுவலகம் திறக்கப்படும்.






      Dinamalar
      Follow us