sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் காங்., தலைவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

/

பீஹார் காங்., தலைவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

பீஹார் காங்., தலைவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

பீஹார் காங்., தலைவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

3


ADDED : பிப் 03, 2025 04:18 PM

Google News

ADDED : பிப் 03, 2025 04:18 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கானின் 18 வயது மகன், இன்று காலை அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

பீஹார் மாநிலத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஷகீல் அகமது கான் உள்ளார். இவருக்கு அயன் அகமது கான் என்ற மகனும், மகளும் உள்ளனர். இன்று காலை பாட்னாவில் உள்ள அவரது வீட்டில், அயன் அகமது கான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து பாட்னா மூத்த காவல் கண்காணிப்பாளர் அவ்காஷ் குமார் கூறியதாவது:

பாட்னாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற பொதுப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் அயன் அகமது கான், எம்.எல்.ஏ.வின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு தோன்றுகிறது. தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

கானுக்கு ஒரு மகள் உள்ளார், அவர் தற்போது சட்டப் பட்டம் படித்து வருகிறார்.

தடயவியல் குழுவின் உதவியுடன் நாங்கள் சம்பவ இடத்திலிருந்து அறிவியல் ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்.

வரவிருக்கும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளால் அவர் அழுத்தத்தில் இருந்தாரா என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறோம். அவரது குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுவோம். இப்போதைக்கு, இது தற்கொலை மரணம் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்பத்தினர் நீதியை உறுதி செய்ய ஒரு முழுமையான விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து முழு விசாரணை மேற்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவ்காஷ் குமார் கூறினார்.






      Dinamalar
      Follow us