sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

/

பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி

பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி


ADDED : நவ 10, 2025 08:55 AM

Google News

ADDED : நவ 10, 2025 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரின் பாட்னா மாவட்டத்தின் டானாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்தது. கூரை திடீரென இடிந்து விழுந்து, குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். சத்தம் கேட்டதும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் பப்லு கான், அவரது மனைவி ரோஷன் கட்டூன், அவர்களது மகன் முகமது சந்த், மகள் ருக்ஷார் மற்றும் அவர்களது இளைய மகள் சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us