ADDED : ஆக 19, 2011 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தூர் : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா நகல்களை, பா.ஜ., கட்சியினர் இந்தூரில் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னா ஹசாரேவின், ஜன்லோக்பால் மசோதாவை விரைவில் அமல்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை ஆதரிப்பதாக கூறிய மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கண்டித்து அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியினரே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.