sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., ஈஸ்வரப்பாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., அறிவுரை

/

பா.ஜ., ஈஸ்வரப்பாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., அறிவுரை

பா.ஜ., ஈஸ்வரப்பாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., அறிவுரை

பா.ஜ., ஈஸ்வரப்பாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., அறிவுரை


ADDED : பிப் 13, 2024 06:49 AM

Google News

ADDED : பிப் 13, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா மூத்தவர். அவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்,'' என, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் காட்டமாக தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:

பா.ஜ.,வினருக்கு மானம், மரியாதை இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் 5,233 வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் நடந்துள்ளன. வெறும் 22 வழக்குகள் மட்டுமே நிரூபணமாகின. சோதனைக்கு ஆளானவர்களில், 3,000 பேர் காங்கிரசார். இவர்களையே குறிவைத்து சோதனை நடக்கிறது.

ஈஸ்வரப்பாவுக்கு பதவி போய்விட்டது. அவர் மூத்தவர்; வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருக்க வேண்டும். இவரால் முதல்வர் சித்தாமையா, துணை முதல்வர் சிவகுமாரைத் தொடவும் முடியாது.

சித்தராமையா, சிவகுமாரின் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இதிலிருந்தே அவருக்கு, எவ்வளவு பயம் உள்ளது என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us