sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபாநாயகர் அறையில் பா.ஜ.,வினர் வாக்குவாதம்

/

சபாநாயகர் அறையில் பா.ஜ.,வினர் வாக்குவாதம்

சபாநாயகர் அறையில் பா.ஜ.,வினர் வாக்குவாதம்

சபாநாயகர் அறையில் பா.ஜ.,வினர் வாக்குவாதம்


ADDED : டிச 13, 2024 05:10 AM

Google News

ADDED : டிச 13, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: பஞ்சமசாலி சமூகத்தினர் மீது தடியடி நடத்தியது குறித்து விவாதிக்க அனுமதிக்காததால், சபாநாயகர் காதர் அறைக்கு சென்று, பா.ஜ., உறுப்பினர்கள் பிரச்னை செய்தனர்.

பஞ்சமசாலி சமூகத்தினர் மீது போலீஸ் தடியடி நடத்தியது குறித்து, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயானந்த் காசப்பனவர், 'போலீசார் மீது கல்வீசியது பஞ்சமசாலிகள் இல்லை. பா.ஜ.,வினர்' என்றார். இதனால் பா.ஜ., உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினர். கூச்சல், குழப்பம் நிலவியதால், அவையை ஒத்திவைத்து விட்டு சபாநாயகர் காதர் தனது அறைக்கு சென்றார்.

இதையடுத்து, அவரது அறைக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் அசோக், துணை தலைவர் அரவிந்த் பெல்லத், சுனில்குமார் உள்ளிட்டோர், சபாநாயகர் காதரிடம், 'நீங்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறீர்கள். பஞ்சமசாலி விவகாரம் குறித்து, எங்களுக்கு பேச அனுமதி அளிக்காதது ஏன்' என்று பிரச்னை செய்தனர். அந்த அறையில் இருந்த மேஜையை தட்டினர்.

இதுபற்றி அறிந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் அங்கு சென்றனர். இரு கட்சியினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் மார்ஷல்கள் தவித்தனர். பின் ஒரு வழியாக அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us