sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : செப் 20, 2025 09:33 PM

Google News

ADDED : செப் 20, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று காலை வெடிகுண்டு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. தீவிர ஆய்வுக்குப் பின், புரளி என அறிவிக்கப்பட்டது.

டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி விட்டது. சமீபத்தில், உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்நிலையில், நேற்று காலை 6:10 மணிக்கு, துவாரகா பப்ளிக் பள்லி, கிருஷ்ணா மாடல் பள்ளி உட்பட டில்லியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, 'இ-மெயில்' வாயிலாக வந்த கடிதத்தில், பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் பள்ளிகளில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் புரளி என அறிவித்தனர். இந்த மிரட்டல் இ-மெயில் குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us