ADDED : நவ 09, 2024 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: விதான்சவுதா கார்டனில், பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, மது பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகத்திலும், வளாகத்திலும் சிகரெட் புகைக்க, குட்கா, பான் மசாலா உட்பட, புகையிலை பொருட்களை உட்கொள்ள தடை விதித்து, நேற்று முன் தினம் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று பெங்களூரு, விதான்சவுதாவின் மேற்கு நுழைவு வாயில் கார்டனில், காலியான பீர் பாட்டில் கிடந்தது. போலீசாரின் கண்களை மறைத்து, கார்டனுக்குள் பீர் பாட்டிலை கொண்டு வந்து, அருந்திவிட்டு பாட்டிலை அங்கு வீசிச் சென்றுள்ளனர்.
பீர் பாட்டில் கிடக்கும் படம், சமூக வலைதளத்தில் பரவியது. அரசின் உத்தரவுக்கு மதிப்பில்லையா என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.