ADDED : பிப் 26, 2024 07:11 AM

தங்கவயல்: தங்கவயல் மகா போதி அசோகா தம்ம துாத புத்த சங்கத்தில் புத்த பவுர்ணமி விசேஷ பூஜை நேற்று நடந்தது.
தங்கவயலின் பழைய கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிப்போ அருகில் உள்ள அசோக தம்ம துாத புத்த சங்கத்தில், மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் முழு பொறுப்பையும் பெங்களூரில் உள்ள மகாபோதி சங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனால் பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களை சேர்ந்த புத்த பிட்சுகள் இங்கு வந்து தங்கி, புத்த அறநெறியை பரப்பி வருகின்றனர்.
நேற்று காலை புத்த பவுர்ணமி பூஜையுடன், அசோக தம்ம துாத புத்த சங்கத்தின் முதன்மை நிர்வாகி சி.என்.ராஜு 18ம் ஆண்டு நினைவு நாள், சமீபத்தில் மறைந்த சி.மிலிந்தர் நினைவு நாளை அனுசரித்தனர்.
மகா போதி புத்த பிக்குகள், நிர்வாகிகள் டாக்டர் பூர்னேஷ்ராஜ், ஆர்.பிரபுராம், கவுதமன், மதிவாணன், பிரதாபன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

